மேதினியில்மக்களெல்லாந்தன்னில்

    மெய்யாகிமெய்யாகஏழுபெற்று

ஆதிமுதல்ஔத்திரியாற்றன்னை

    ஐயமறக்கண்டாரைஓதவைத்து

நீதிநிலைநாட்டுஞானந்தன்னின்

    நாதமூலமந்திரச்சொரூபமேயச்

சோதிவீடுபேரின்பமுத்திச்

சோவருள்வாய்நாவரூபேஆரணங்கே!

பொருள்

 

இந்தப்பாடல் அடிகள் பக்திப் பொருளைக் கொண்ட, சந்த நயமிக்கநவீனப் பக்திப் பாடலாகஅல்லது தோத்திரச்செய்யுளாகத்தெரிந்தாலும்மிகவும் ஆழமான ஆன்மிகமற்றும்தத்துவஉட்பொருள்கொண்டமந்திரம்ஆகும். இம்மந்திரம் இறைவனையோ அல்லது கலைமகளையோ ஞானத்தின் வடிவமாக வர்ணித்துப் போற்றுகின்றதைப்போலத்தோன்றினாலும், அதையும்தாண்டிஆதிநாதத்தைஇறைஞ்சிவேண்டும்ஒருமந்திரம்ஆகும்.அறிவர்ஆதிநாதபரமஹம்ஸர்மாஅவர்களின் விளக்கங்கள் இந்தமந்திரத்திற்கு மிக உன்னதமான, தத்துவார்த்த ஆழம் கொண்ட பலபழைய-புதிய பரிமாணங்களைக்கொண்டிருந்தாலும்,,சைவ சித்தாந்தம்மற்றும்யோகக் கலைச்சொல் பொருத்தங்களும் கொண்டுஞான முதிர்ச்சியால்முடிந்தவரை ஆழமாக, சைவ சித்தாந்த மற்றும் சிவயோக மரபுகளோடு பொருத்திவிரித்துப்பார்ப்போம்:
  1. பாடல் அடிகளின் பொருள் விளக்கம்

அடி1: “மேதினியில்மக்களெல்லாந்தன்னில்

        மெய்யாகிமெய்யாகஏழுபெற்று”

1) இப்புவியில் (மேதினியில்) வாழும் மனிதர்கள், இந்த உடம்பே நிலையானது என்று நம்பாமல், ஆன்மிக உண்மைகளை உணர்ந்து மெய்யறிவு (உண்மை ஞானம்) பெற்றவர்களாக மாறி, உண்மையாகஏழ்பிறவிப்பயனைப்பெற்று…

2) மேதினியாகிய இவ்வுலகில் மக்கள் என்னும் நிலையை அடைந்த உயிர்த்தோற்றத்தினர் தன்னில் மெய்யாகி, அதாவது உண்மைநிலை என்னும் நிலையை அடைந்து; மெய்யென்னும் என்றும் உள்பொருளாக விளங்கும் உண்மையறிவு நிலையோடு கலந்து மெய்யாக, அதாவது பதியில் கலப்பதற்காக ஏழு என்னும் பிறவிப்பெரும்பயனைப் பெற்று,….

3) மே என்னும் அன்பை இல் என்னும் வீட்டில் தினித்து வாழும் உயர்நிலையைப்பெற்ற மக்கள் (நரனாகப் பிறந்து ஐந்து பொறிபுலன்களும் முழுமையாகப் பெற்று ஆறறிவும் இறைவுணர்வும் பெற்றவர்கள்) அவ்வேத நாத போதத்தில் மெய்யாவதற்காகவே ஏழு வித்தியாதத்துவங்களைக் கடனாகப் பெற்று வந்ததை நினைந்து ஏழு அறிவுநிலைகளையும் பெற்று மீண்டும் பிறந்து,….

4) தன்னில் மெய்யாகி மெய்யாக:இத்தொடர் இருநிலைகளைக் குறிக்கிறது. முதலாவது‘ஆன்ம தரிசனம்’ (தன்னில் மெய்யாதல்) அதாவது, ஆன்மா தன்னை (உடலோ, பொறிகளோ அல்லவென்றும்),தான் ஓருயர்ந்த அறிவுப்பொருள் என்றும் தனக்குள்ளேயே உணர்தல். இரண்டாவது‘சிவ தரிசனம்’ (மெய்யாக) தான் அழியாத அறிவுப்பொருளாய் நின்றுகொண்டு, தனக்கு ஆதாரமாக இருக்கும் என்றும் உள்பொருளாகிய ‘மெய்’ (பதி/சிவம்) என்னும் பேரறிவோடு இரண்டறக் கலத்தல்…

5) ஏழுபெற்று (பிறவிப் பெரும்பயன்):ஆன்மாக்கள் தாவரமாய், புழுவாய், விலங்காய் மும்மலக் கட்டுகளில் உழன்று, இறுதியாகப் பெறும் உன்னதப் பிறவிதான் மனிதப் பிறவி. அந்த மனிதப் பிறவியில்தான் ‘ஆன்ம ஞானம்’ பெறும் தகுதி வாய்க்கிறது. எனவேதான், இப்பிறவியை‘ஏழு என்னும் பிறவிப் பெரும்பயன்’ (ஏழுவகைப் பிறவிகளின் இறுதிப் பயன்) என்று எண்ணுவதோடுநின்றுவிடாமல், சித்தாந்த உண்மையின்படிஇந்தமனிதப்பிறவியிலேயேஇருக்கும் எழுமையையும் உணர்ந்து, ஏழு பிறவிகளின் முடிவில் கிட்டும் இம்மெய்நிலைப்பயனைப் பெற்றே ஆன்மா பதியில் கலக்க முயல்கிறது…என்பதையும்,

 

6) முப்பத்தியாறு தத்துவக் கோட்பாடுகளையும், சிவராஜ யோகத்தின் உச்சத்தையும்தொடும் மிக நுட்பமான, அரிய அடுத்தவிளக்கமாக, மேதினியில் மக்கள்: ‘மே’ (அன்பு/மேன்மை) + ‘இல்’ (வீடு/இதயம்) + ‘தினி’ (செறிவூட்டுதல்). அன்பை இதயக் கோயிலில் செறிவூட்டி வாழும் தகுதியுடைய ‘மக்கள்’ என்னும் ஆறறிவுயிர்கள், ‘தன்’ (இறைவனின் வேதம்/நாதம்) என்னும் ஒலியோடு ஒன்றிணையும் தகுதி பெறுகின்றனர்…என்பதையும்,

7) ஏழு வித்தியாதத்துவக் கடன்:சைவ சித்தாந்த தத்துவப் படிவளர்ச்சியில், அசுத்த மாயையிலிருந்து தோன்றும்காலம், நியதி, கலை, வித்தை, அராகம், புருடன், மாயைஆகிய ஏழும்‘வித்தியாதத்துவங்கள்’எனப்படும். ஆன்மா இவ்வுலகில் கர்ம வினைகளை நுகர்வதற்காக, இறைவன் இந்த ஏழு தத்துவங்களையும் ஒரு ‘கடன்’ போல (போக சாதனங்களாக) ஆன்மாவுக்குத் தந்து உதவுகிறான்…என்பதையும்,

8) ஏழு அறிவுநிலைகள் (ஞான பூமிகள்):இங்ஙனம் வித்தியாதத்துவங்களைப் பெற்றுப் பிறந்த ஆன்மா, உலக போகங்களில் மூழ்கிக் கிடக்காமல், ஞான மார்க்கத்தின் ஏழு அறிவுநிலைகளை (ஏழு ஞான பூமிகள்:சுபவிச்சை, விசாரணை, தனுமானசி, சத்துவாபத்தி, அசம்சக்தி, பதார்த்தாபாவனை, துரியகா) படிப்படியாகப் பெற்று, உலகியல் மாயையைக் கடந்து, மீண்டும் பிறவாத பேரின்ப நிலையை (ஜீவசமாதி/சாயுச்சியம்) நோக்கித் திரும்புகிறது என்பதையும் இவ்வரி மிக நுட்பமாக உணர்த்துகிறது.

9) இவ்வாறுஎல்லா விளக்கங்களையும் இணைத்துப் பார்க்கும்போது, இவ்வடியானது“ஆன்மா அசுத்த மாயையின் ஏழு கருவிகளைத் துணையாகக் கொண்டு மனிதப் பிறவி என்னும் பெரும்பயனை அடைந்து, அகத்தே தன் உண்மை நிலையை உணர்ந்து (ஆன்ம சுத்தி), இறுதியில் ஏழு ஞான பூமிகளின் வழியே ஏறிச் சென்று என்றும் உள்பொருளான சிவத்தோடு கலக்கிறதுஎன்ற உன்னத ஆன்மீகப் பயணத்தின் முழு வரைபடமாகத் திகழ்கிறது. (அடுத்தடுத்தஅடிகளின்பொருட்பெருமைகளைஅடுத்தப்பதிவில் காண்போம்)

  1. இம்மந்திர வரிகள் உச்சரிப்பதற்கு மிகவும் இனிமையாகஇருப்பதோடு, சூக்குமஉடலுக்குள்உள்ளத்தைத்தூக்கிக்கொண்டுசென்று, முக்திஅடைவிற்கானபதினோருகாரியங்களையும் மனத்திற்கு நல்கும் காரண நாத நயங்களைக் கொண்டுள்ள அதியற்புதஆற்றல்பெட்டகங்களாகவும்விளங்குகின்றன. மேலும்,இதில் பயின்று வந்துள்ளசந்த நயம் (Rhythmic Metre)ஆன்மிகத்தேடலின்ஆரம்பக்காலக்கட்டத்தில் இருக்கும்அன்பர்களுக்கும்தங்கள்மனத்தைச் செம்மைப்படுத்தும்நுண்ணியநுட்பத்திறன் பெற்றதாகவிளங்குகின்றது. தமிழ் இலக்கணத்தில் சந்தம் என்பது சொற்களை ஒரு குறிப்பிட்ட மாத்திரை அளவில், சீரான கால இடைவெளியில் ஒலிக்கச் செய்வதைக் குறிக்கும்.இந்தமந்திரத்தின் சந்த நயம், வெறும் சொற்களின் சேர்க்கையாக மட்டுமேஇல்லாமல், படிப்பவரின் மனதில் ஒரு தியான நிலையை அல்லது ஆன்மிக அதிர்வை (Vibration) உண்டாக்கும் வல்லமையைப் பெற்றுள்ளது.சித்தாந்தம்மற்றும்வேதாந்தங்களில் குறிப்பிடப்படுகின்ற‘சோதிபத-சாயுச்சியம்’என்னும்ஆன்மிகத்தத்துவக் கருத்தின்உன்னதமானஅடைவைஇம்மந்திரத்தைஓதி அடையலாம்.

  2. நீங்களும்தன்ஜீவனை,அறிவை,இறைவனைஅறிந்து உணர்ந்து அடைந்துஅனுபவிக்கவும், இதுபோன்றஇன்னும்பலசக்திமிக்கமந்திரங்களைஓதிவீடு பேற்றினைஅடைந்துஇன்புற்றுப்பேரானந்தவாழ்வை வாழவும்,“ஆன்மிகஅடைவுமுன்னேற்றம்” (Yoga Classes for Spiritual Attainment) யோகவகுப்புகளில்கலந்துபயின்றும், அறந்தைதமிழ்ச்சங்கம்வெளியிடும்ஆன்மிகம்சார்ந்த நூல்களைமுறையாகக்கற்றும்விரும்புகிறபயனை அடையுங்கள்.

     

CourseLink: https://aranthaitamilsangam.org/spiritual-attainment/

Shop Link:

-ஞானயோகி, ஆகோகிரன்ஜெ,

நிருவாகஇயக்குநர், அறந்தைதமிழ்ச்சங்கம்.

Contact Information

Copyright ©️ 2025 Aranthai Tamil Sangam. All Rights Reserved Designed by Wink Dezign

1
1
Your Cart
Fitness Development
Fitness Development Qty: 1
Price: Original price was: ₹27,500.00.Current price is: ₹26,400.00.
Save 1,100.00
26,400.00
Secure Checkout
Fast Shipping
Easy Returns
Scroll to Top