பொருள்
“சொல்லாமல்சொல்லுவதும், கேளாமல்கேட்பதும், பாராமல்பார்ப்பதும், தொடாமல்தொடுவதுமாகியஞானதுரைத்தனமுற்று, கைகால்போய்முட்டாதபூசைவணக்கமுடையபாரவான்கள்அருளிச்செய்துள்ளமெய்மைக்கிரந்தங்களுக்கு, இதயகமலவாசனைத்தன்னில்தரிசித்தலாகியதன்னைஅறிதலென்னும்மறுபிறப்புப்புனல்ஜென்மம்பெறாதவர்கள், தங்கள்அவலமதிப்புக்காகஇச்சையுற்று, பொருள்தருகிறேன்என்றுஉரைசெய்யமுற்பட்டால், அந்தப்பாரவான்களின்சாபத்திற்குஆளாகுவார்கள்என்பதுசத்தியமே. அதோடுஇறைவனின்சாபமும்அவர்கள்தலையில்வந்துவிழும்.”என்று, மறலிகைதீண்டாசாலைஆண்டவர்கள்மெய்ம்மதக்கர்த்தர்அவர்கள்தங்கள்திருவேதத்தில்அருளிச்செய்துள்ளார்கள்.
மெய்ஞ்ஞானப்பாரவான்கள்இயற்றியுள்ளமெய்ம்மைக்கிரந்தங்களுக்கோமந்திரங்களுக்கோநான்பொருள்தருகிறேன்என்று இவ்வுலகமக்கள்தங்கள்அவலமதிப்புக்காகஇச்சையுற்றுப்பொருள்செய்யக்கூடாது. நாம்இந்தமந்திரத்தின்சூக்கும, காரண, மகாகாரணப்பொருளுகளைஅறியமுற்படாமல்இதில்ஓரளவிற்குத்தூலவளவில்தெரியும்அழகைமட்டுமாவதுஉணர்ந்துஇன்புறலாம் என்பதற்காகவேஇதைப்பகிர்கிறேன்.
இந்தமந்திரவரிகள் பக்திப் பொருளைக் கொண்ட, சந்த நயமிக்கநவீனப் பக்திப் பாடலாகஅல்லது தோத்திரப் பாடலாகத்தெரிந்தாலும்மிகவும் ஆழமான ஆன்மிகமற்றும்தத்துவஉட்பொருள்கொண்டமந்திரம்ஆகும். இப்பாடல் இறைவனையோ அல்லது கலைமகளையோ (சரஸ்வதி) ஞானத்தின் வடிவமாக வர்ணித்துப் போற்றுகிறதைப்போலத்தோன்றினாலும், அதையும்தாண்டிஆதிநாதத்தைஇறைஞ்சிவேண்டும்ஒருமந்திரம்ஆகும்.இப்பாடலின்சிலஇலக்கணக் கூறுகள்மற்றும்பொருள் விளக்கங்களைக்காண்போம்.
தமிழ்மொழியின்எல்லா உயிரெழுத்துகளின் ஓசைகளும், எல்லா மெய்யெழுத்துகளின் ஓசைகளும் இப்பாடலில் பயின்று வரும்படி அறிவர்ஆதிநாதபரமஹம்ஸர்மாஅவர்கள் இதைப்பகுத்திருப்பது சாதாரணமான ஒன்றல்ல; இது தமிழ் யாப்பிலக்கணத்தில்‘சித்திரக்கவி’ (Lipogrammatic/Pangrammatic poetry) வகையில், அல்லது‘எழுத்தொலித் தொகை நயம்’- தமிழ் மொழியின் அனைத்து ஒலிகளையும் அடக்கிய அகில ஒலிச்செய்யுள்எனப்படும் மிக உயரிய மொழி வித்தையாகும்.இந்தவிவரத்தைச் சரிபார்க்க, இப்பாடலில் உள்ள அனைத்து உயிர் மற்றும் மெய் ஒலிகளையும் தனித்தனியாகப் பிரித்து ஆராய்வோம்.